Tuesday, August 11, 2009

ஆகஸ்ட்டு-15 சுதந்திர நாளா ?






ஆகஸ்ட்டு-15 சுதந்திர நாளா ?


இந்திய எகாதிபத்தியமானது ஆகஸ்ட்டு-15 நாளை தனக்கு சுதந்திரநாளாக அறிவித்துக்கொண்டு பல்வேறு மொழி தேசிய இனங்களின் வாழ்வாதாரத்தை அடக்கி ஒடுக்கி வருகிறது.தமிழ் தேசமோ தனது சொந்த இறையாண்மையை இழந்து டெல்லியின் அடிமையாக இருக்கிறது. இராயிரம் பழமைவாய்ந்த தாய்மொழி தமிழில் படிக்கவும், ஆட்சி செய்யவும், நீதிமன்றத்திலும், நிர்வாகத்திலும் தமிழை பயன்படுத்தமுடியாமல் இருக்கிறோம். மறுபுறமோ ஆங்கில திமிங்கலமும், இந்தியும் தமிழகத்தில் கோலோச்சுக்கிறது.


ஈழ தேசிய விடுதலைப்போரை ஏழு நாடுகள் துணையோடு இரத்தவெள்ளத்தில் கோழைத்தனமாக மூழ்கடித்ததோடு, தமிழகமீனவர்களையும் பாதுகாக்க இயலாத உரிமையை இழந்த இனமாக தமிழகம் இருந்துவருகிறது. தமிழகத்தின் உயிராயுதமான நீரை அண்டை தேசிய இனங்கள் பறித்து வருகிறது. முல்லைப்பெரியாறு, காவிரியாறு, பாலாறு என அதன் உரிமைகளை இழந்து வரட்சி தேசமாக மாறிவருகிறது. இந்தியா என்ற பெயரினால் நமது தமிழ்த்தேசம் குடிநீரில், ஆற்றுநீரில், அணைநீர் உரிமையை இழந்துவருகிறது, மேலும் ஒடுக்கப்பட்ட மக்கள் மனிதர்கள் என்ற மதிப்பில்கூட இன்று வரை பெறமுடியாமல் ஊர், சேரி என இழிவுப்படுத்தப்பட்டு வருவதோடு தீண்டாமை கொடுமையும் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஈழத்து தமிழர்கள் சுயமரியாதையோடு தமிழகத்தில் வாழமுடியாமல் அகதிகள் என்ற பெயரில் கொட்டடியில் அடைப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.


தமிழகத்தில் "விவசாயமும்-தொழிற்துறையும்" தரகு முதலாளிய ஏகாதிபத்திய சக்திகள் நலனுக்காக சுறையாடப்பட்டுவருகிறது மேலும் பெண்களின் உரிமை, சமத்துவத்தை மதிக்காத ஆணாதிக்க சமுதாயமாக நிலவுகிறது. இந்நிலையில் ஒடுக்கப்பட்ட தமிழ்த்தேசிய இனம் ஆகஸ்ட்டு-15 நாளாக கொண்டாட இயலுமா ? இல்லவே இல்லை தமிழ்தேசிய விடுதலை உழவர் தொழிலாளர் தலைமையில் தமிழ்தேசிய மக்கள் சனநாயக குடியரசு அமைப்பதே சுதந்திரமாகும்

இந்நிலையில் தமிழ்தேசிய மக்களிடம் கிழ்கண்ட முழக்கத்தின் அடிப்படையில் ஆகஸ்ட்டு-15 சுதந்திர நாளா ? என்ற கேள்வி கணைகளோடு பு.இ.மு, பு.தொ.மு, ஒ.ம.வி.மு, பு.மா.மு, ஆகிய அமைப்புகள் சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், மற்றும் தெருமுனைகூட்டங்கள் வாயிலாக விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டனர்.

இந்திய ஏகாதிபத்தியத்திடம் ஆட்சியுரிமை இழந்த அடிமை தமிழகத்துக்கு ஆகஸ்ட்டு-15 சுதந்திர நாளா ?
*தமிழ் ஆட்சி மொழி, பயிற்று மொழி, நீதி-நிர்வாக மொழியுரிமையிழந்து ஆங்கிலமும், இந்தியும் கோலோச்சுவது சுதந்திரமா?
*ஈழத்தமிழர்களையும், மீனவர்களையும் காக்கும் உரிமை இழந்தது சுதந்திரமா?
*குடிநீரும், நதிநீரும், அனைநீரும் பெறமுடியாதது சுதந்திரமா?
*ஒடுக்கப்பட்ட மக்களின் குடியுரிமை-சமத்துவம் மறுக்கப்படுவது சுதந்திரமா?
*எகாதிபத்தியபிடியில் தொழில்துறை, விவசாயம் அழிவது சுதந்திரமா ?
புரட்சிகர இளைஞர் முன்னணி.
புரட்சிகர தொழிலாளர் முன்னணி .
ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி.
புரட்சிகர மாணவர் முன்னணி.
-தமிழகம் கதிர்