Tuesday, May 18, 2010

புரட்சிகர இளைஞர் முன்னணி குறும்பாலம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

பொன்னேரி-குன்னமஞ்சேரி ஆரணி ஆற்றின் நடுவே குறும்பாலம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்.

சென்னை அடுத்த பொன்னேரியில் புரட்சிகர இளைஞர் முன்னணி,ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து பொன்னேரி-குன்னமஞ்சேரி ஆரணி ஆற்றின் நடுவே குறும்பாலம் அமைக்கக்கோரி 26-4-2010 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


பொன்னேரி தலுக்காவில் உள்ள பொன்னேரி-குன்னமஞ்சேரி ஆரணி ஆற்றின் நடுவே குறும்பாலம் அமைக்கக்கோரி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் போராடி வருகின்றனர்.இதுவரை அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.மாறாக அரசும், அதிகாரிகளும் பொய்யான வாக்குறுதிகளைக் அள்ளிவீசி மக்களை எய்து வறுகின்றனர். இதை கண்டித்தும் பொன்னேரி-குன்னமஞ்சேரி ஆரணி ஆற்றின் நடுவே குறும்பாலம் உடனே அமைக்கக்கோரி புரட்சிகர இளைஞர் முன்னணி,ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பில் 26-4-2010 அன்று காலை 10.00 மணி அளவில் பொன்னேரி,அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


இவ்ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்.அறிவுமதி(புரட்சிகர இளைஞர் முன்னணி) தலைமை வகித்தார். தோழர்.கதிர்நிலவன் (புரட்சிகர இளைஞர் முன்னணி), தோழர்.ஆனந்தன் (ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி),குமரன் (புரட்சிகர தொழிலாளர் முன்னணி), வழக்குரைஞர்.பொன்செல்வன், வழக்குரைஞர்.லெனின், வழக்குரைஞர்.இளவரசன், வழக்குரைஞர்.புருசோத்தமன், வழக்குரைஞர்.கோபி,மாதவன்( 17 வது வார்டு உறுப்பினர் பெரியக்காவனம்),தனுஸ்கோடி(திருவள்ளுவர் மக்கள் மேம்பாட்டுசாங்கம்),கோபி(குன்னம்சேரி),ஜெயசீலன்(ஏலியம்பேடு),தேவராஜ்(வைரவன்குப்பம்),குப்பன்(பெறுவாயல்), சங்கர்(வைரவன் குப்பம்),பாலைய்யா (நரிக்குறவர்கள் தலைவர் இந்திராநகர்),டேனியல்(தலைவர் இந்திராநகர்),ஏழுமலை(பெற்றோர் ஆசிரியர் கழகம் சின்னக்காவனம்) காந்திமதி (2வது வார்டு உறுப்பினர் சின்னக்காவனம்),அற்புதம்மாள்( மகளிர் சுய உதவிக்குழு-ஏலியம்பேடு) ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில் 200 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.