Saturday, July 25, 2009

'இந்து'-ராமை கண்டித்து......!



சிங்கள இனவெறியன் பாசிசக்கொடுங்கோலன் ராசபக்சே அரசு, இந்திய, சீன, பாக்கிஸ்தான், மற்றும் ஏகாதிபத்திய நாடுகளின் உதவிகளைப்பெற்று ஈழத்தமிழர்களை கூண்டோடு அழித்து தாயகநிலத்தை பறித்து, ஈழத்தமிழர்களை ராசபக்சேவின் வதை முகாம்களில் சித்திரவதை,படுகொலை செய்துவருகின்றனர்.

முள்கம்பி வேலிகளில் விலங்குகள்போல் அடைத்தும் உண்ண உணவின்றி, குடிநீரின்றி, 'ஆட்டுமந்தை'போல் கட்டாந்தரையில் தமிழீழமக்கள் அல்லல் படுகின்றனர், இதை உலக ஏகாதிபத்திய நாடுகள் கைகட்டி வேடிக்கை பார்த்துவருகிறது.

இந்நிலையில் உலக ஊடகங்கள் , ராசபக்சேவின் வதை முகாம்களை பார்க்க அனுமதி மறுத்துவரும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த தமிழின எதிரி 'இந்து'-ராம் தன் இந்து ஏட்டில் தமிழகத்தின் அகதி முகாம்களைவிட ராசபக்சேவின் அகதி முகாம்கள் சிறப்பாக உள்ளது என்று சொல்லியுள்ளார்.
ஈழத்தமிழர்களின் பிறப்புரிமை என்பது, தனது தமிழீழ தாயகத்தை அடைவதே. அதுவன்றி தமிழீழ மக்களுக்கு கதி முகாம் தீர்வாகாது. இது நல்ல அகதி முகாம், இது கெட்ட அகதி முகாம் என்று ஒன்றும்மில்லை. அகதிமுகாம் என்பதே சுதந்திரத்தை பறிப்பதேயாகும். இத்தகைய ஈழத்தமிழருக்கு, எதிராக எழுதிவரும் சிங்கள கைக்கூலி தமிழின எதிரி 'இந்து'-ராம் உள்ளிட்ட கும்பலை தமிழகத்தைவிட்டு விரட்டியடிக்கவேண்டும் என்று பு..மு.(புரட்சிகர இளைஞர் முன்னணி) அமைப்பினரால் சென்னை மாவட்ட அளவில் சுவரொட்டி பரப்புரை விரிவாக செயதுள்ளனர்.


இவன் ..

செங்கடலான் தமிழகம்











No comments:

Post a Comment