Tuesday, November 24, 2009

தமிழக மீனவர்கள் பாதுகாப்புக்கு ஆயுதங்கள் வழங்கு !




தமிழர்களின் சொந்த கடற்பரப்பு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதிலிருந்து 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தமிழக கடற்பரப்பில் சிங்கள கடற்படையால் தொடர்ந்து சுட்டுக்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதனை கண்டித்து பேரணி பொதுக்கூட்டம் புரட்சிகர இளைஞர் முன்னணி தலைமையில், புரட்சிகர தொழிலாளர் முன்னணி , ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி , புரட்சிகர மாணவர்முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து திருவொற்றியூர் பகுதில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தினர்.
இப்பேரணி
22/11/2009
மாலை 4 மணி அளவில் சுங்கசாவடியிலிருந்து (திருவொற்றியூர்) தோழர்.எழிலன் தலைமையில் துவங்கியது , கடலாரு பத்திரிக்கை ஆசிரியர் பேரணியை துவக்கிவைத்தார். இப்பேரணி நல்லதண்ணீர் ஒடைகுப்பம்,திருச்சினாங்குப்பம், ஒண்டிகுப்பம், திருவொற்றியூர்குப்பம் வழியாக பெரியார் நகரில் (திருவொச்ற்றியூர்) முடிவுற்றது. பேரணி முடிவில் மாலை 6 மணிக்கு தோழர்.தென்கனல் தலைமையில் நடைபெற்றது பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்திய அரசே!
*சிங்கள இனவெறி அரசுடனான தூதரக உறவுகளை இரத்து செய் !
*பொருளுதவிகளையும், ஆயுத உதவிகளையும் உடனே நிறுத்து !
*கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய் ! கச்சத்தீவை திரும்பப் பெறு !
தமிழக அரசே!
*தமிழக மீனவர்கள் பாதுகாப்புக்கு ஆயுதங்கள் வழங்கு !
*இந்திய - இலங்கை கச்சத்தீவு ஒப்பந்தத்தை நிராகரி !
தமிழக மக்களே!
*தமிழக மீனவர்களின் வாழ்வுரிமைக்கும், பாதுகாப்புக்கும் போராடுவோம் !
*சிங்கள, இந்திய அரசுகளின் தமிழின அழிப்புக் கொள்கையை முறியடிப்போம் !

மேற்கண்ட முழக்கங்கள் அடிப்படையில் தோழர்.தாமரை(புரட்சிகர தொழிலாளர் முன்னணி ), தோழர்.தமிழ்மணி(புரட்சிகர தொழிலாளர் முன்னணி ),தோழர்.மார்க்ஸ்(புரட்சிகர இளைஞர் முன்னணி),தோழர்.கபிலன்(புரட்சிகர மாணவர் முன்னணி),தோழர்.ஆனந்தன்(ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ,ராஜாமணி - நல்லதண்ணீர் ஒடைகுப்பம் மீனவ பஞ்சாயத்து ,ஆர்.சத்தியநாதன் - தலைவர் திருச்சினாங்குப்பம் மீனவபஞ்சாயத்து (திருவொற்றியூர்),எம்.மாசிலமணி - ஒண்டிகுப்பம் மீனவபஞ்சாயத்து (திருவொற்றியூர்),ஆர்.மணி - திருவொற்றியூர் மீனவபஞ்சாயத்து ,எம்.பழநி - நிர்வாகி பலகைதொட்டிகுப்பம் மீனவபஞ்சாயத்து,தோழர்.விஜயா - நல்லதண்ணீர் ஒடைகுப்பம்,மாசிலமணி - தாழங்குப்பம் மீனவபஞ்சாயத்து (எண்ணூர்),ராஜி - நிர்வாகி நெற்றுகுப்பம் மீனவபஞ்சாயத்து (எண்ணூர்),எம்.வரதன் - முகதுவாரகுப்பம் மீனவபஞ்சாயத்து (எண்ணூர்),சிந்தனைசிற்பி சிங்கரவேலர் பேரவை ( Ashok Leyland ),வா.வு.சி நகர் மீனவபஞ்சாயத்தார் ,பெரியகுப்பம் மீனவபஞ்சாயத்தார் (எண்ணூர்),சின்னகுப்பம் மீனவபஞ்சாயத்தார் (எண்ணூர்),காசிகுப்பம் மீனவபஞ்சாயத்தார் (எண்ணூர்)
ஆகியோர் கலந்து கொண்டனர். 7 கோடி மக்கள் கொண்ட தமிழர்கள் நம்மால் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவதை நம்மால் தடுக்க இயலாத கையறுநிலையில் நாம் உள்ளோம். இதற்கு தமிழகத்திற்கு இறையாண்மை ஏதும் இல்லாததால்தான் நாம் அடிமைத்தனத்தில் உள்ளோம். அடிமையின் குரல் அம்பலம் ஏறாது. இந்திய 'இறையாண்மைக்கு' தமிழகத்தின் சொந்த இறையாண்மையைப் பலி கொடுத்துவிட்டு அடிமையாய் குரல் எழுப்பும் தமிழ் நாட்டின் குரல் டெல்லி ஏகாதிபத்தியத்தின் காதுகளில் ஏறாது.தெற்காசிய மண்டலத்தில் இந்தியாவின் தமிழர் விரோதக் கொள்கை முடிவுக்கு வர வேண்டும் என்றும் சிங்கள இனவெறி அரசுடனான தூதரக உறவுகளை இரத்து செய் யவும்,பொருளுதவிகளையும், ஆயுத உதவிகளையும் உடனே நிறுத்த வேண்டும் என்றும்,*கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய் ! கச்சத்தீவை திரும்பப் பெறு ! என்றும்,தமிழக அரசே!
*தமிழக மீனவர்கள் பாதுகாப்புக்கு ஆயுதங்கள் வழங்கு ! *இந்திய - இலங்கை கச்சத்தீவு ஒப்பந்தத்தை நிராகரி ! என்றும் தமிழக மக்களே! *தமிழக மீனவர்களின் வாழ்வுரிமைக்கும், பாதுகாப்புக்கும் போராடுவோம் ! *சிங்கள, இந்திய அரசுகளின் தமிழின அழிப்புக் கொள்கையை முறியடிப்போம் ! என பேசினார் .

இறுதியில் தோழர்.தமிழ்மாறன்(புரட்சிகர தொழிலாளர் முன்னணி) நன்றியுரையாற்றினார், இப்பேரணி பொதுக்கூட்டம் துவக்கம் மற்றும் முடிவில் பு.இ.மு, பு.தொ.மு, ஒ.ம.வி.மு, பு.மா.மு ஆகிய அமைப்பு தோழர்கள்,மீனவப்பெருங்குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 2000 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர், இப்பொதுக்கூட்டத்தின் முடிவில் 6 கண்டன தீர்மானங்கள் நிறைவ்வேற்றபட்டது. இப்பேரணி பொதுக்கூட்டம் வாயிலாக திருவொற்றியூர் பகுதி மக்களிடையே புரட்சிகர எழுச்சியை
உண்டாககியது
இப்படிக்கு
தென்கடலான்
தமிழ்நாடு

Saturday, November 21, 2009

பேரணி- பொதுக்கூட்டம்


இந்திய அரசே!

* சிங்கள இனவெறி அரசுடனான உறவுகளை ரத்து செய்!
* பொருளுதவிகளையும் ஆயுத உதவிகளையும் உடனே நிறுத்து!
* கச்ச தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்! கச்ச தீவை திரும்பப்பெறு!


தமிழக அரசே!


* தமிழக மீனவர்கள் பாதுகாப்புக்கு ஆயுதங்கள் வழங்கு!
* இந்திய இலங்கை கச்சதீவு ஒப்பந்தத்தை நிராகரி!





தமிழக மக்களே!



* தமிழக மீனவர்களின் வாழ்வுரிமைக்கும் பாதுகாப்புக்கும் போராடுவோம்!
* சிங்கள இந்திய அரசுகளின் தமிழின அழிப்பு கொள்கையை முறியடிப்போம்!


ஆகிய முழக்கங்களை முன்வைத்து இன்று (22-11-2009) ஞாயிறு மாலை 4.00 மணி அளவில் சென்னை தண்டையார் பேட்டையை அடுத்த சுங்கச்சாவடி பேருந்துநிலையம் அருகே பேரணி தொடங்கி திருவொற்றியூர் பெரியார் நகர்பெரியார்சிலை அருகில் நிறைவடைகிறது. அதனை தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது .

இங்ஙனம்

புரட்சிகர இளைஞர் முன்னணி
புரட்சிகர தொழிலாளர் முன்னணி
புரட்சிகர மாணவர் முன்னணி
ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி
சென்னை தொலைபேசி - 9940023345

Monday, October 26, 2009

முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -8

மலையாள இனவெறிக்கு எடுபிடிகளான தமிழக சி.பி.எம்.


முல்லைப் பெரியாறு அணை நீரிலிருந்து ஒரு ஏக்கர் அளவில் கூட கேரளம் விவசாயம் செய்யாத நிலையிலும், கேரள மக்களின் தேவைக்கு இந்நீரைப் பயன்படுத்தாத போதிலும் தமிழ்நாட்டிற்கு நீரைத் தர மறுப்பதோடு, அணை நீரை வீணாகக் கடலில் கலக்கும் வேலையைத்தான் கேரள சி.பி.எம். அரசு செய்து வருகின்றது. தமிழ்நாட்டின் விளை நிலங்களைத் தரிசாக்கிவிட்டு - தமிழ்நாட்டு உழவர்களை வேளாண்மை உற்பத்தியிலிருந்து விரட்டியடிக்கும் நோக்கத்தில் தான் விவசாயப் புரட்சி பேசும் சி.பி.எம். கட்சி தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிறது. கேரள சி.பி.எம். கட்சியின் இத்துரோகத்தனத்திற்கு எடுபிடியாகத் தமிழ் மாநில சி.பி.எம். கட்சியும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.


முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிடச் சென்ற தமிழ்நாட்டின் அமைச்சர் துரைமுருகனை கேரள சி.பி.எம். குண்டர்கள் முற்றுகையிட்டு இழிவாகவும், தரக்குறைவாகவும் திட்டியபோது, மலையாள இன வெறியுட்டும் கேரள சி.பி.எம். கட்சியின் தமிழர் விரோத நடவடிக்கையைக் கண்டிக்கக்கூட மறுத்தது தமிழ் மாநில சி.பி.எம். கட்சி. இதற்குக் காரணம், தமிழ்நாட்டில் எத்தனை முறை சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்தாலும், தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் நான்கைந்து உறுப்பினர்களை மட்டுமே தமிழ்நாட்டு சி.பி.எம். கட்சியால் பெறமுடியும். ஆனால், கேரளத்தில் முதல்வர் பதவியே பெறமுடியும். ஆக சி.பி.எம். கட்சியைப் பொறுத்தளவில் ஆட்சியைப் பிடிப்பது - பதவியைக் காப்பாற்றுவது ஒன்று மட்டும்தான் நோக்கம். இந்நோக்கத்தை நிறைவேற்றத்தான் இந்தியாவில் உள்ள எல்லா சி.பி.எம். கிளைகளின் செயல்பாடுகளும் அமைந்திருக்கின்றன.
தொடரும்...

Tuesday, October 20, 2009

முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -7

மலையாள இனவெறியைத் தூண்டிய கேரள சி.பி.எம்:

சர்வதேசத் தொழிலாளர்களின் ஒற்றுமை குறித்துப் பேசும் சி.பி.எம். கட்சிதான் தற்போது கேரளத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் புரட்சி என்றும், தொழிலாளர் வர்க்கப் புரட்சி என்றும் வாயிகிழிய பேசிக்கொண்டிருக்கும் சி.பி.எம். கட்சி கேரளத்தின் எதிர் கட்சியாக இருந்தபோது முல்லை பெரியாறு அணை குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை கடந்த 27-02-2006 இல் வழங்கியது. அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி தலைமையிலான கேரள அரசு அத்தீர்ப்பை ஏற்க மறுத்துவிட்டது. மேலும் இத்தீர்ப்பைச் செல்லுபடியாக்கவிடாமல் தடுப்பதற்காகவே கேரளச் சட்டமன்றத்தில் 'கேரள அணைகள் பாதுகாப்புச் சட்டம்' ஒன்றை முன்மொழிந்தது. அச்சட்டத்தை எதிர்க் கட்சியாக இருந்த சி.பி.எம். கட்சி வழிமொழிந்தது. அதுமட்டும்மல்லாமல், உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு செய்தது. அதற்கடுத்துதான், சி.பி.எம். கட்சி ஆட்சிக்கு வந்தது. இதற்கிடையில் முல்லைப் பெரியாறு அணை குறித்து ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுபடியும் உறுதி செய்யும் வகையில் 2006 ஆகஸ்ட்டு மாதத்தில் தீர்ப்பை வழங்கியது.


பல இலட்சம் தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க மறுத்துக் காலில் போட்டு மிதிக்கிறது மலையாள இனவெறி சி.பி.எம். அரசு. ஆனால் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாக வேடங்கட்டும் இக்கட்சி, கொகோ கோலா ஆலை குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தலைவணங்கி வரவேற்றது. அதாவது, கேரளத்தின் பாலக்காடு அருகே பிலாசிமாடா எனும்மிடத்தில் அமைந்துள்ள அமேரிக்க ஏகாதிபத்தியத்தின் கொகோ கோலா ஆலையை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கொகோ கோலாவுக்குச் சாதகமான வகையில் தீர்ப்பை வழங்கியது. இத்தீர்ப்பை சி.பி.எம். கட்சி துளியளவும் எதிர்க்கவில்லை, பல இலட்சம் மக்கள் பயன்பெரும் வகையில் வெளிவந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மறுப்பதும், ஏகாதிபத்திய நிறுவனங்கள் கொள்ளையடிக்கும் வகையில் வெளிவரும் தீர்ப்புகளை உச்சிமுகர்ந்து வரவேற்பதும்தான் சி.பி.எம். கட்ச்யின் சர்வதேசியமாக இருந்து கொண்டிருக்கிறது.

பாட்டாளி வர்க்க சர்வதேசியம் பேசித் திரியும் சி,பி.எம். கட்சி, மிக எளிய உண்மைகளைக்கூட கண்டு கொள்ள மறுக்கின்றது. உண்மைக்கு மாறாகப் பல பொய்யான செய்திகளையே கிளிப்பிள்ளை மாதிரி திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறது. முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் இடுக்கி உள்ளிட்ட அய்ந்து மாவட்ட மக்கள் கடலில் முழ்கி இறந்து விடுவார்கள் என்ற பொய்யான செய்திகளைத் திட்டமிட்டுப் பரப்பி விடுவதில் சி.பி.எம்.கட்சி கங்கணம் கட்டித் திரிகின்றது. உண்மை என்னவெனில், முல்லைப் பெரியாறு அணையின் உபரிநீர் வழிந்தோடும் பகுதி முழுவதும் அடர்ந்த வனப்பகுதியாகும். அப்பகுதியானது மக்கள் வாழும் பகுதி அல்ல என்பது முதல் உண்மை. அதுமட்டும்மல்லாமல், முல்லைப் பெரியாறு அணையானது கடல் மட்டத்திலிருந்து 2869 அடி உயரத்தில் உள்ளது. அணை நீரில் மூழ்கி விடுவதாகச் சொல்லப்படும் பகுதிகள் அனைத்தும் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி முதல் 4750 அடி வரையிலான உயரத்தில் உள்ளன. நீர் பள்ளமான பகுதியை நோக்கியே பாயிந்தோடும் என்ற எளிய உண்மையைக் கூட மறைத்து, கேரள மக்களிடையே பயபீதியை உருவாக்கி வருகின்றது கேரளாவின் சி.பி.எம். அரசு.

கேரள அரசு சொல்வதைப் போன்று அணை உடைவதாக ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொண்டாலும், முல்லைப் பெரியாறு அணையின் கொள்ளளவைக் (முழுக் கொள்ளளவு 15 டி.எம் சி.) காட்டிலும், பல அளவு கொள்ளளவு கொண்ட (70 டி.எம் சி.) இடுக்கி அணை முல்லைப் பெரியாறு அணைக்குக் கிழே கட்டப்பட்டு இருக்கிறது. ஒரு வேலை முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கூட அவ்வணையின் 15 டி.எம் சி. நீரும் 70 அடி டி.எம் சி. கொள்ளளவு கொண்ட இடுக்கி அனைக்குத்தான் போய்ச்சேரும். முல்லைப் பெரியாறு அணைக்கும் இடுக்கி அணைக்கும் இடைப்பட்ட இப்பகுதி மக்கள் குடியிருப்பு இல்லாத காட்டுப் பகுதியாகும். அதுமட்டும்மலாமல் இடுக்கி அணைக்குக் கிழே கேரள அரசால் கட்டப்பட்ட பத்து அணைகள் இருக்கின்றன. ஆக முல்லைப் பெரியாறு அணை உடைந்து-அதனால் இடுக்கி அணை உடைந்து அதற்கடுத் துள்ள பத்து அணைகளும் உடைந்து இடுக்கி உள்ளிட்ட அய்ந்து மாவட்டங்களில் வாழும் 35 இலச்சம் மக்கள் கடலில் மிதப்பது போன்ற கிராபிக்ஸ் வீடியோ காட்சிகளை இணைய தளத்திலும், உள்ளூர் கேபிள் தொலைக் காட்சிகளிலும், குருந்தகுடு களிலும் பரப்பிய 'கம்யூனிச மாமேதை' என சி.பி.எம். கட்சியினரால் புகழப்பட்ட அச்சுதானந்தன் தான் கேரள அரசின் தற்போதைய முதல்வர். "விட்டலாச்சாரியா" படங்களையும் மிஞ்சும் வகையில் சி.பி.எம். கட்சியினரால் அவிழ்த்துவிடப்பட்ட கிராபிக்ஸ் பொய்க் காட்சிகள் கொண்ட இப்படத்திற்கு, தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எம். கட்சியின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இந்த ஆண்டின் சிறந்த படமாகத் தேர்ந்தெடுத்து விருது கொடுத்தாலும் வியப்பதற்கில்லை.

கேரள சி.பி.எம். அரசின் முதல்வர் அச்சுதானந்தன் இன்னொரு கற்பனைப் புரட்டையும் அவிழ்த்துவிட்டுள்ளார். அதாவது முல்லைப் பெரியாறு அணை சுண்ணாம்புக் காறையால் கட்டப்பட்டது என்றும், இதன் ஆயுள் காலம் 50 ஆண்டுகளுடன் முடிந்துபோய்விட்டது என்றும் பென்னிக் குய்க் சொன்னதாக அச்சுதானந்தன் கூறுகிறார். அச்சுதானந்தன் இப்படிக் கூறுவது முழுக்க முழுக்க வடிகட்டிய அயோக்கிய பொய்த்தனம் ஆகும். பென்னிக் குய்க் எந்த ஒரு இடத்திலும் இப்படிக் குறிப்பிடவில்லை என்பது ஒருபுறமிருக்க, அச்சுதானந்தன் வாதப்படி 50 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட அணைகளை இடிக்க வேண்டும் என முடிவு செய்தால் இந்தியாவில் மட்டும்மல்ல உலகில் உள்ள பெரும்பாலான அணைகள் முழுவதயும் இடிக்கத்தான் நேரிடும். அச்சுதானந்தன் கூறுவது போல 50 ஆண்டுகளுக்கு முந்திய எந்த அணையும் பலவீனமாக இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடவில்லை. மேலும் முல்லைப் பெரியாறு கட்டப்பட்ட காலத்தில் அதே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட பல அணைகள், ஆற்றுப் பாலங்கள் போன்றவை இன்றளவிலும் நல்ல நிலையில் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதே அடிப்படை உண்மையாகும்.
தொடரும்...

Sunday, October 18, 2009

முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -6

முல்லைப் பெரியாறு பலப்படுத்தப்பட்ட வரலாறு- 2

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 1978 இல் 145 அடியாகவும் 1979 முதல் 136 அடியாகவும் குறைக்கப்பட்டதால், ஒரு போகம் மட்டுமே சாகுபடி செய்த சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் சுமார் 40,000 ஏக்கர் நிலம் தரிசாக மாறியது. காலங்காலமாக வறட்சியால் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள் தங்கள் நிலங்கள் தரிசாகக் கிடப்பதைப் போட்டுவிட்டு, பிழைப்பு தேடி சொந்த மண்ணையும் விட்டு வெளியேறி பெரு நகரங்களுக்கும், வெளிமாநிலத்திற்கும், வெளிநாடுகளுக்கும் சென்று, மிகக் குறைந்த கூலிக்குக் கொத்தடிமைகளைப் போல வேலை செய்து, அகதியைப் போல வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதோடு, இரு போகம் சாகுபடி செய்த ஒரு இலச்சம் ஏக்கர் நிலங்கள் ஒரு போகம் சாகுபடியாக மாறியது. இம்மாவட்டங்களின் நிலத்தடி நீர் மட்டமும் அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. மேலும் இப்பகுதி மக்களின் குடிநீர்த் தேவைக்குக் கூட நீரில்லாமல் குளம், கண்மாயி, ஏரிகள் அனைத்தும் வறண்டு போயிக் கிடக்கின்றன. பல கோடி ரூபாய் செலவில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

1979 இல் மத்திய நீர்வள ஆணையத்தின் முன்னிலையில் இரு மாநில அரசுகளும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்தும் பணிகளை 1985 லேயே முடித்த பின்பும் அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவதர்க்குக் கேரள அரசுகள் மறுத்து வந்தன. இதனால் கால் நூற்றாண்டு காலமாகப் பாதிக்கப்பட்ட உழவர்கள் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையை உச்ச நீதி மன்றத்திற்குக் கொண்டு சென்றனர்.

மத்திய நீர்வள ஆணையம், மத்திய மண் விசையியல் ஆராய்ச்சி நிலையம், ஆகியவற்றைச் சார்ந்த தலைசிறந்த நிபுணர்கள் அணையைப் பார்வையிட்டதற்குப் பின்பாக, அணையைப் பலப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளன என்று சான்று வழங்கியதோடு, அணையின் நீர் மட்டத்தை உயர்த்தகூடாது என்பதற்கு கேரள அரசால் சொல்லப்பட்டக் காரணங்கள் அனைத்தும் பொய்யானவையே எனக்கூரி நிராகரித்தனர். அணையின் நீர்மட்டத்தை முதற்கட்டமாக 145 அடிக்கு உயர்த்துவதால் அணைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் அந்நிபுணர்கள் கூரிவிட்டனர். இதன் அடிப்படையில்தான் கடந்த 27-02-2006 அன்று "முல்லை பெரியாறு அணையில் 142 அடிவரை நீரைத் தேக்கலாம்" என உச்ச நீதிமன்றம் தீர்ப்பும் வழங்கியுள்ளது. ஆனாலும், கேரள அரசு 1979 இல் தமிழ்நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறுவதோடு, நிபுனர்க் குழுக்களின் அறிக்கையையும் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மதித்துச் செயல்படுத்த மறுக்கிறது. முல்லைப் பெரியாறு அணையில் சட்ட வழியிலும், அறிவியல் வழியிலும், அறவழிப்பட்ட வகையிலும் தமிழ்நாட்டின் உரிமைகளை ஏற்க மறுத்து, சண்டித்தனம் செய்வதோடு, பழைய பொய் களையே கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு, கேரள மக்களிடம் பய பீதியை ஏற்படுத்தியும் இனவெறியை ஊட்டியும் வருகின்றது கேரள அரசு.
தொடரும்...

Thursday, October 15, 2009

முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -5

முல்லைப் பெரியாறு பலப்படுத்தப்பட்ட வரலாறு:

கேரள அரசு மற்றும் கேரள இனவெறிக் கட்சிகள் சொல்வதைப் போன்று முல்லைப் பெரியாறு அணைக்கு எவ்விதப் பாதிப்புகளும் ஏற்பட்டதில்லை. இனியும் பாதிப்புகள் வருவதாகத் தெரியவில்லை. அதாவது 1924, 1933, 1940, 1943, 1961, 1977 ஆகிய ஆண்டுகளில் அணையின் முழுக் கொள்ளளவான 152 அடிவரை நீரைத் தேக்கிவைத்த போதும் அணைக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை.மேலும் 1943 இல் மிக அதிகபட்சமாக 154 அடிவரை நீர் மட்டம் உயர்ந்த போதும் அணைக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது அணையானது பலமாகக் கட்டப்பட்டது என்றாலும் தமிழக அரசு இன்றைய கேரள மாநிலம் உருவாக்கப்படுவதற்கு முன்பே 1930,1933 ஆகிய ஆண்டுகளிலும், கேரள மாநிலம் பிரிக்கப்பட்டப் பிறகு 1960 ஆம் ஆண்டிலும் கேரள அரசுகள் சொல்லாமலேயே அணையைப் பலப்படுத்தும் பணிகளைச் செய்து கொண்டுதான் இருந்தது. இது ஒருபுறமிருக்க, 1976 இல் முல்லைப் பெரியாறு அணைக்குக் கிழே 40 கிலோமீட்டர் தொலைவில் 555 அடி உயரமுள்ள இடுக்கி அணையை 800 மெகாவாட் நீர் மின் உற்பத்திக்காகக் கட்டி எழுப்பியது கேரள அரசு. இடுக்கி அணை கட்டப்பட்டது முதல் இன்று வரையிலும் ஒரு முறைகூட முழுக் கொள்ளளவுக்கும் நிறையவில்லை. இந்த இடுக்கி அணை கட்டப்பட்ட பிறகுதான் கேரள அரசு தனது பொய்பபுறடடுகளை வேகமாகப் பரப்பி வந்தது.

1978 இல் அணை பலவீனமாகிவிட்டது என்று கேரள அரசு மீண்டும் புரளியைக் கிளப்பிவிட்டதால் அணையின் நீர் மட்டம் 145 அடியாகக் குறைக்கப் பட்டுவிட்டது. இதை தொடர்ந்து 1979 இல் பீர்மடு எம்.எல்.ஏவாக இருந்த கே.கே.தாமஸ் என்பவர் அணையின் நீர் மட்டத்தை மீண்டும் குறைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார். அப்போது அணையைப் பார்வையிட்ட மத்திய நீர்வள ஆணையத் தலைவர் 'அணை பலமாகவே உள்ளது, கேரள மக்களின் அச்சம் தேவையற்றது' எனக் கூறினார். இருப்பினும் கேரளத்தின் அச்சத்தைப் போக்குவதற்கு அணையைப் பலப்படுத்தும் பணிகளைக் கீழ்கண்டவாறு செய்யவேண்டும் என கேரள-தமிழ்நாடு அரசுகளிடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதற்கிடையில் அணையைப் பலப்படுத்தும் பணிகள் செய்து முடிக்கும் வரை அணையின் நீர் மட்டம் 136 அடியாகத் தற்காலிகமாகக் குறைக்கப்பட்டது. கேரள-தமிழ்நாடு அரசுகளிடையே செய்து கொண்ட ஒப்பந்தப்படி,

1. அணையின் மேற்புற கைப்பிடிச்சுவரின் உயரத்தைக் கூட்டுதல்.

2. 12 அடி அகலமுள்ள அணையின் மேற்புறத்தை 21 அடியாக மாற்றும் வகையில் கான்கீரிட் தொப்பி அமைத்தல்.(RCC Capping)

3. அணையை அதன் அடித்தளப் பாறையுடன் இரும்புக் கம்பி நங்கூரம் அமைத்துஇணைத்துக் கட்டுதல். (Cable Anchoring )

4. தற்போதுள்ள 144 அடி அகலமுள்ள அடித்தளத்துடன் புதியதாக 56 அடி அகலமுள்ள கான்கீரிட் சப்போர்ட் அணையை 145 அடி உயரம் வரை கட்டுதல்.

5. தற்போதுள்ள 36 அடி அகலம் 16 அடி உயரம் கொண்ட 10 நீர்ப்போக்கி மதகுகளுடன் கூடுதலாக 40 அடி அகலம் 16 அடி உயரம் உள்ள 3 மதகுகளை அமைத்தல்.

அணையை பலப்படுத்தும் பணிகளைச் கேரள ஒப்பந்தக்காரர்களைக் கொண்டே தமிழ்நாடு அரசு செய்து வந்தாலும், அப்பணிகளை முடிக்கவிடாமல் கேரள அரசுகள் இடையுறு செய்து வந்தன. இதன் காரணமாகவே மூன்று ஆண்டுகளில் முடிய வேண்டிய பணிகள் பல ஆண்டுக் கணக்கில் செய்ய வேண்டியதாகிப் போனது. இதற்கிடையில் பெரியாறு நீர் பிடிப்புப் பகுதிகளில் கெவி அணை, ஆணைத்தோடு அணை, கட்கி அணை, பம்பா அணை போன்ற அணைகளைக் கட்டியெழுப்பி முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்தையும் கேரள அரசுகள் குறைத்துவிட்டன.
தொடரும்...

Wednesday, September 30, 2009

முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -4



முல்லைப் பெரியாற்று நீரைத் திருட கேரள அரசுகள் சதி:




1956 இல் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழர்கள் காலங்காலமாக வாழ்ந்து வந்த தேவிகுளம், பீர்மேடு (முல்லைப் பெரியாற்று அணை அமைந்துள்ள பகுதி) போன்ற பகுதிகள் அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக கேரள மாநிலத்தோடு இணைக்கப்பட்டன. தமிழ்நாட்டுப் பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரளப் பகுதிகள் தான் என்ற தோற்றத்தை உருவாக்குவதற்கு மலையாளிகளின் குடியேற்றத்தை அப்போதைய கேரள அரசு திட்டமிட்டு நடத்தியது. அதாவது இலங்கையில் சிங்கள இனவெறி அரசு, தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்கள மக்களை வலுக்கட்டாயமாக குடியமர்த்தித் தமிழீழத்தை ஆக்கிரமிப்பு செய்து வருவது போல, அப்போதைய கேரள முதல்வர் பட்டம் தாணுப்பிள்ளை என்பவர் கேரளச் சிறைகளில் இருந்த மலையாளக் கைதிகளை விடுவித்து, அவர்களுக்கு உருபாய் 5 ஆயிரமும் 5 ஏக்கர் நிலமும் கொடுத்து தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் குடியமர்த்தும் வேலைகளைச் செய்தார். தமிழ்நாட்டின் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரளப் பகுதிகள்தான் என்பதைக் காட்டுவதற்காக மலையாளக் குடியேற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தன.







இத்தகைய மலையாளக் குடியேற்றங்களுக்குப் பின்புதான் 1963 இல் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்ற புரளியை, கேரளாவின் மனோரமா இதழ் மூலம் மலையாள மக்களிடம் பரப்பி இனவெறியைத் தூண்டிவிட்டது கேரள அரசு. அன்று முதல் இன்று வரையிலும் தேவிகுளம் பீர்மேடு பகுதிகளில் மலையாள மக்களை குடியேற்றம் செய்தல், பெரியாறு அணை பலவீனமாக உள்ளது எனப் புரளியைக் கிளப்புதல், அணையினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற பயத்தை உருவாக்குதல், பெரியாற்றின் துணை ஆறுகளில் தடுப்பு அணைகளைக் கட்டுதல் தமிழகத்தின் எல்லைக்குள் உள்ள செண்பகவல்லி அணையை உடைத்தல், முல்லைப் பெரியாறு அணை நீர் தேங்கும் பகுதிகளை ஆக்கிரமித்து அரசுக் கட்டிடங்களைக் கட்டுதல், தனியார் பண முதலைகளுக்கு சொகுசு மாளிகைகளும் நட்சத்திர விடுதிகளும் கட்டுவதற்கு அனுமதியளித்தல், சுற்றச் சூழல் பாதிக்கப்படும், வன விலங்குகள் அழியும் எனப் பொய் கூறுதல். அணையைப் பலப்படுத்தும் பணிகளைச் செய்யவிடாமல் தடுத்தல், நிலநடுக்கத்தால் அணை உடைந்துவிடும் என்ற பீதியை உண்டாக்குதல், அணை உடைவது போன்றும், 35 இலச்சம் கேரள மக்கள் அரபிக் கடலில் மிதப்பது போன்றும் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ காட்சிகளை ஒளிபரப்புதல் போன்ற அடாவடித் தனங்களை 1956 முதல் இன்று வரை கேரளத்தை ஆண்டுவரும் மார்க்சிய கம்யுனிஸ்ட் (சி.பி.எம்) கட்சியும், காங்கிரசுக் கட்சியும் மற்றுமுள்ள கேரளாவின் உதிரிக் கட்சிகளும் செய்து வருகின்றன. 'அணைக்கு ஆபத்து' 'அணையால் ஆபத்து' என்று ஒரே குரலில் திரும்பத் திரும்ப பொய் சொல்லி வருகின்றன.

தொடரும்...

Saturday, September 26, 2009

முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -3

முல்லைப் பெரியாறு அணை தமிழர்களின் பொறியியல் - தொழில் நுட்பச் சாதனை
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வேளாண்மைக்குத் தேவையான நீர்ப்பாசனக் கட்டமைப்பை உருவாக்குவதில் தமிழர்கள் தலைசிறந்து விளங்கி வருகின்றனர். நீர்ப்பாசனப் பொறியியல், நீர்ப்பாசனப் பயன்பாட்டு நிர்வாகம் என இரு துறைகளில் சிறந்து விளங்கி வருவதற்குத் தமிழகத்தில் உள்ள 39 ஆயரம் ஏரிகளும், குளங்களும், கண்மாய்களும் சான்றாக உள்ளன. இதுமட்டும்மல்லாது அனைக்கட்டுக்களை உருவாக்குவதிலும் தமிழர்கள் உலகத்திற்கே முன்னோடியாக இருந்த்துள்ளனர் என்பதற்குச் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் கரிகாலன் காலத்தில் கட்டப்பட்ட கல்லணை கம்பீரத்துடன் நிலைத்து நின்று பயன்பட்டுக் கொண்டிருப்பதைக் கூறலாம். ஆங்கிலேயர்கள் தமது ஆட்சிக் காலத்தில் கட்டியெழுப்பிய அணைக் கட்டுமானங்களுக்குக் கல்லணையின் கட்டுமானமே அடிப்படையாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். அதனால்தான் பேயர்டு ஸ்மித் தனது (lrrigation in south india) நூலில் (1853) "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய இந்த அணை மிகச்சிறந்த பொறியியல் சாதனை எனக் கூறிப்பிட்டார்.


மேலும் 1874 இல் கோதாவரி ஆற்றில் தெளலீஸ்வரம் அணையைக் கட்டிய ஆர்தன் காட்டன் தனது நூலில் "ஆழம் காண இயலாத மணற்படுகையில் எப்படி அடித்தளம் அமைப்பது என்ற தொழில் நுட்பத்தை இவர்களிடமிருந்து (கல்லணையைக் கடியவர்களிடம்) தான் நாம் தெரிந்து கொண்டோம். இந்த பாடத்தைப் பயன்படுத்தி ஆற்றுப்பாலங்கள், அணைக்கட்டுகள் போன்ற நீரியல் கட்டுமானங்களைக் கட்டினோம்... எனவே இந்த மகத்தான சாதனை புரிந்த பெயர் தெரியாத அந்நாளைய மக்களுக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். ஆக ஆற்றைத் தடுத்து அணை கட்டி அந்நீரை வேளாண்மைக்குப் பயன் படுத்திய தொழில் நுட்பமும் நிர்வாகமும் தமிழ் வசம் நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே கைவரப்பெற்ற ஒன்றாகும் எனலாம்.
பொதுவாக ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணைகளில் தேக்கிவைக்கப்படும் தண்ணீரில் பாசனத்திற்காக வெளியேறும் நீரும், வெள்ளம் வரும் காலத்தில் உபரி நீரும் மதகுகள் வழியே அணையிலிருந்து வழிந்தோடும்வகையில் அமைந்திருக்கும். ஆனால் முல்லைப் பெரியாறு அணைத் திட்டமானது, மேற்கு நோக்கி பாயிந்தோடும் ஆற்று நீரை அணைகட்டித் தேக்கி வைத்து அந்நீரை ஆற்றின் எதிர் திசையில் கிழக்கு நோக்கி மலையைக் குடைந்து சுரங்கம் தோண்டி, அதன் வழியாக கொண்டுவந்து வைகை ஆற்றோடு முல்லைப் பெரியாற்று நீரை இணைக்கும் நோக்கத்தோடுதான் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது. ஓர் ஆற்றுப் படுக்கையிலிருந்து மற்றோர் ஆற்றுப் படுகைக்கு நீரைத் திருப்பும் இத்திட்டம் உலகிலேய முதலாவது எனக் கருதலாம். இவ்வாறான முல்லைப் பெரியாறு அணை வெகு சீக்கிரமாகவோ, வெகு சுலபமாகவோ, எவ்வித பாதிப்பும் இன்றியோ கட்டப்படவில்லை. மாறாக பல்வேறு இடர்பாடுகளையும் உயிர் இழப்புகளையும் கடந்துதான் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது.







முல்லைப் பெரியாறு பகுதிகள் யாவும் அடர்ந்த வனப் பகுதியாகும். கொடிய விலங்குகள் மற்றும் மலேரியா, காலரா, முடக்குவாதம் போன்ற நோய்கள் பரவும் தட்பவெப்பச் சூழல்களைக் கொண்ட பகுதியாகும். திடிரென வருகின்ற காட்டாற்று வெள்ளம் அணைக் கட்டுமானங்களை அடித்துச் சென்றதோடு, அப்பணியில் ஈடுபட்டுருந்த ஊழியர்களையும் அடித்துச் சென்றிருக்கிறது.






முல்லைப் பெரியாறு அணையின் வேலைகள் பாதியளவு முடிவடைந்தநிலையில் 1890 இல் பெரியாற்றில் வந்த பெரு வெள்ளமானது அணைக் கட்டுமானம் அனைத்தையும் உடைத்துச் சென்றுவிட்டது. ஆகவே இந்த அணையைக் கட்டும் திட்டத்தைக் கைவிடுவதாக ஆங்கிலேயே அரசு அறிவித்தது. ஆனாலும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டுவதில் பென்னிக் குயிக் உறுதியாக இருந்தார். ஆணை கட்டும் செலவினங்களுக்காக இங்கிலாந்து சென்று தனது சொத்துக்களையெல்லாம் விற்று விட்டு, அதில் கிடைத்த 85 இலச்சம் ரூபாயையும் செலவழித்துத்தான் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடிக்கிறார். பென்னிக் குயிக். இரண்டாவது முறையாக அணை கட்டும் போது அணையானது வெள்ளத்தில் உடையாமல் இருக்க 185 இடங்களில் தடுப்பு அணைகளைக் கட்டினார். அதோடு முல்லைப் பெரியாறு அணையின் இடது புறம் கால்வாய் வெட்டி தண்ணீரைத் திருப்பி விட்டார். அணை முழுவதும் கட்டி முடிக்கப்பட்டவுடன் இடது புறம் வெட்டப்பட்ட கால்வாயில் 240 அடி நீளமுள்ள சிற்றனை (பேபி டேம் ) ஒன்றையும் கட்டி முடித்தார்.






1241 அடி நீளத்தில் (சுமார் அரை கிலோமீட்டர் தூரம்) மிகப்பெரிய அளவில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் அடித்தளத்திலிருந்து 172 அடியாகும். இதில் நீரைத் தேக்கும் உயரம் 155 அடியாகும். திடீரென வரும் வெள்ளத்தையும் சமாளிக்கும் வகையில் 152 அடிவரை மட்டுமே நீர் தேக்கப்பட்டு வருகின்றது. இவ்வனையானது நீர்த் தேங்கும் பகுதியில் செங்குத்தாகவும், அதற்குத் எதிர்ப்புறம் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் சரிவாகவும் கட்டப்பட்டிருக்கிறது. இதனால் 172 அடி உயரமுள்ள அணையின் மேற்புறம் 12 அடி அகலத்திலும் அடித்தளம் 144 அடி அகலத்திலும் (மொத்த உயரத்தில் முக்கால் பங்கு அடித்தளம்) அமைக்கப்பட்டுள்ளது.






இந்த அணையில் தேங்கும் நீரிணை கிழக்கு திசையில் 5765 அடி நீளமும் (சுமார் 2 கிலோமீட்டர்). 60 அடி ஆழமும் 80 அடி அகலமும் கொண்ட பெரிய கால்வாய் மூலம் கொண்டு வந்து, பின்பு அந்நீரை மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட 5345 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்ட சுரங்கத்தின் மூலம் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப்படுகிறது. அதற்குப் பிறகு 78 கிலோமீட்டர் நீளமுள்ள பெரியாறு கால்வாய் மூலம் வைகை ஆற்றுடன் இணைக்கப்படுகிறது. அணையிலிருந்து மேற்குறிப்பிட்ட சுரங்கத்தின் வழியாக வினாடிக்கு 2000 கன அடி அளவு தண்ணீரை மட்டுமே வெளிய எடுக்கமுடியும். மேலும். 152 அடி உயரமுள்ள அணையில் 104 அடி வரை தேங்கும் நீரைத்தான் எடுக்க முடியும். 104 அடிக்குக் கீழே உள்ள நீரை எடுக்க முடியாது. ஏனென்றால் தண்ணீரைக் கொண்டுவறப் பயன்படுத்தும் சுரங்க வழியானது 104 அடி வரை உள்ள நீரிணை மட்டுமே எடுக்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, அணையின் மொத்த கொள்ளளவான 15 டி.எம்.சி. தண்ணீரில் 10 டி.எம்.சி. நீரை மட்டுமே அணையிலிருந்து வெளியே கொண்டுவரமுடியும். மீதமுள்ள 5 டி.எம்.சி. நீர் கிடப்பு நீராக (Dead Storage) அணைக்குள் இருக்கும். இவ்வாறாக உருவாக்கப்பட்ட முல்லைப் பெரியாறு அணையானது முழுவதும் முட்டுச் சுவரால் தடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் மற்ற அணைகளைப் போல அல்லாமல் நீர் தேங்குமிடம். உபரி நீர் வெளியேறுமிடம், தமிழ்நாட்டிற்கு நீர் வருமிடம் ஆகிய அனைத்தும் வெவ்வேறு இடங்களில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.






முல்லைப் பெரியாறு அணை ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கட்டப்பட்டிருந்தாலும் அவ்வையின் தொழில்நுட்பமும் உழைப்பும் தமிழர்களுக்குச் சொந்தமானவை. பென்னிக் குயிக் மேற்கொண்ட பெருமுயற்சிக்கு உயிரோட்டம் தந்தவர்கள் தமிழர்கள்தான். அணையின் கட்டுமானப் பொருட்களும் தமிழ்நாட்டைச் சார்ந்ததுதான். அனைக்குத்தேவையான கட்டுமானக் கருவிகள் அனைத்தும் மதுரைப் பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்டவை. அணையின் இருபுறம் கருங்கற்கள், சுண்ணாம்பு, செங்கல் கடுக்காய், இஞ்சி, கருப்பட்டி, தேக்குமரப்பட்டை போன்ற பொருட்களையும் பயன்படுத்தித்தான் இன்வனை கட்டப்பட்டிருக்கிறது. முல்லைப் பெரியாறு அணை மிகப்பெரும் அளவிலான பொருட் செலவு மட்டுமின்றி மிகப்பெரும் அளவிலான உயிர்ச் சேதங்களையும் செலவாகக்கொண்டு கட்டப்பட்டிருக்கிறது. இந்நேரத்தில் நினைக்கப் படவேண்டியவர் பென்னிக் குயிக் மட்டுமல்ல, அவோரோடு சேர்ந்து உழைத்த தொழிலாளிகள், உயிர் நீத்த உழைப்பாளிகள் உடன் நின்ற அதிகாரிகளும்-உயிர் நீத்த அதிகாரிகளும்தான்.










முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு அவ்வணையின் நீர் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய அய்ந்து மாவட்ட மக்களின் வேளாண்மை மற்றும் குடிநீர்த் தேவைகள் ஓரளவு நிறைவேறின. மேலும் இம்மாவட்டங்களின் பாசனப் பரப்பு 20 ஆயிரம் ஏக்கரிலிருந்து 2 இலச்சம் ஏக்கராக அதிகரித்தது.





தொடரும்...












Thursday, September 17, 2009

முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -2

முல்லைப் பெரியாறு அணை கட்டிய வரலாறு :


தமிழகத்தின் நெல்லை மாவட்டம் சுந்தரமலையில் உள்ள சிவகிரி சிகரத்தில் தோன்றும் பெரியாறு. தன்னோடு பெருந்துறையாறு, சின்ன ஆறு, சிறு ஆறு, சிறுதோணி ஆறு, கட்டப்பனையாறு, இடமலையாறு, முல்லையாறு, ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டு சுமார் 300 கிலோ மீட்டர் வடமேற்குத் திசையில் பாய்ந்து இறுதியில் கொச்சி எர்ணாகுளம் அருகே கடலில் கலக்கிறது. பெரியாறு தற்போதைய தமிழக எல்லைக்குள் 56 கிலோ மீட்டர் தூரமும், தற்போதைய கேரள எல்லைக்குள் 244 கிலோ மீட்டர் தூரமும் பாயிகின்றது. அடர்ந்த வனப்பகுதிகளின் வழியாகப் பாய்ந்தோடும் பெரியாற்றின் சமவெளிப் பகுதி வெறும் 25 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே.


பெரியாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் சூன், சூலை, ஆகஸ்ட்டு மாதங்களில் தென்மேற்குப் பருவ மழையும், அக்டோபர், நவம்பர், திசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவ மழையும் பொழிவதால் ஆண்டின் பெரும்பகுதிக்காலம் பெரியாற்றில் வெள்ளம் வழிந்தோடுகிறது. இது ஒருபுறமிருக்க,
'கோள்நிலை திரிந்து கோடை நீடினும்

தான் நிலை திரியா தண்டமிழ்ப் பாவை'
என பழந்தமிழ் இலக்கியங்களால் குறிக்கப்பெறும் வைகை ஆறு மதுரை. சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளை வலப்படுத்திவந்தது. 18 மற்றும் 19 ஆம் நுற்றாண்டுகளில் வைகை ஆறும் பொய்த்துப்போனது. இதனால் வேளாண்மை உற்பத்தி சீர்குலைந்தது.வேளாண்மைத் தொழிலை மேற்கொண்ட இப்பகுதி மக்கள் வறட்சியின் கோரப் பிடிக்குள் சிக்குண்டு பஞ்சத்தாளும் பசியாலும் பட்டினியாலும் பல்வேறு இன்னல்களைச் சந்திக்க நேரிட்டது. இந்நிலையில் இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கும் வேளாண்மை உர்ப்பத்தித் தேவைக்கும் ஆற்று நீரையே பயன் படுத்த வேண்டிய கட்டாயம் இருந்த காரத்தினால். அபோதைய இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் மற்றும் அமைச்சர் முத்து இருளப்பர் ஆகியோர், பெரியாற்றில் இருந்து கால்வாய் வெட்டி - மேற்கு நோக்கிச் செல்லும் ஆற்று நீரை தென் தமிழகம் நோக்கித் திருப்பிக் கொண்டுவருவது பற்றி ஆராய 1798 இல் ஒரு குழுவை அமைத்தனர். இகுழு அளித்த திட்டத்தை போதிய நிதி இல்லாத காரணத்தால் சேதுபதி மன்னர்களால் நிறைவேற்ற முடியவில்லை. இதன் பிறகுதான் ஆங்கிலேயர்கள் மேற்குறித்த திட்டம் குறித்து ஆய்வு செய்யத் தொடங்கியதோடு, அத்திட்டத்தை நிறைவேற்றவும் அக்கறை காட்டினர்.


1808 இல் ஜேம்ஸ் கால்டுவெல் என்பவர் அணை கட்டும் திட்ட ஆய்வைச் செய்துள்ளார். 1850 இல் முல்லையாற்றில் அணை கட்டும் முயற்ச்சியானது, அப்பகுதியில் தொற்று நோய் பரவியதன் காரணமாக நின்று போனது. பின்னர் 1862 இல் 162 உயர அணை கட்டும் திட்டம் மேஜர் ரைவீஸ் மற்றும் மேஜர் பேயின் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இத்திட்டம் குறித்து மேலும் ஆராய்வதற்காக 1868 இல் கர்னல் ஜெ. பென்னி குயிக் என்பவரை அப்போதைய ஆங்கில அரசாங்கம் நியமித்தது. இதற்கிடையில், 1870 இல் பென்னி குயிக் மாற்றப்பட்டு இத்திட்டத்தை நிறைவேற்ற ஸ்மித் என்பவர் நியமிக்கப்பட்டார். 175 அடி உயரத்தில் அணை கட்டும் திட்டத்தை அவர் முன்மொழிந்தார். இத்திட்டத்தை ஆராய்ந்த ஆங்கிலேய அரசு அதை நிறை வேற்றும் பொறுப்பை திரு.பென்னி குயிக்கிடம் 1882 இல் மீண்டும் வழங்கியது. உரூ.65 இலச்சம் மதிப்பீட்டில் அணை கட்டும் திட்டம் இறுதியாக்கப்பட்டது.


முல்லை ஆறும், பெரியாரும் இணையும் இடத்திற்கு அருகே அணை கட்ட முடிவு எடுக்கப்பட்டது அணை கட்டப்பட விருந்த இப்பகுதியானது முழுவதுமான தமிழர் பகுதியாகும். தேவிகுளம், பீர்மடு போன்ற பகுதிகள் தமிழர்கள் வாழ்ந்து வந்த பகுதியாகும். இன்றளவும் அப்பகுதிகளில் தமிழர்களே பெரும்பான்மையாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அணை கட்டப்படவிருக்கும் இப்பகுதியிலிருந்து சுமார் 62 கிலோமீட்டர் தொலைவுவரை தமிழ்நாட்டு எல்லைப்பகுதி அமைந்திருந்தது. இதற்க்குபின்புதான் கொட்டாரக்கரை அடூர் போன்ற பகுதிகள் கொண்ட அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான எல்லை தொடங்குகிறது. இருப்பினும் அணை கட்டப்படவுள்ள பகுதி தமிழ்நாட்டு பகுதியா, திருவிதாங்கூர் சமஸ்தான பகுதியா என்பதில் தெளிவில்லாத ஆங்கிலேய அரசாங்கம். ஆணை கட்டப்படவுள்ள பகுதி திருவிதாங்கூர் சமஸ்தான பகுதி என்பதாகக் கொண்டு, 1886 அக்டோபர் 28 இல் திருவிதாங்கூர் சமஸ்த்தானத்துடன் 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தைச் செய்துகொண்டது. இவ்வொப்பந்தப்படி அணை நீரால் மூழ்கும் 8000 ஏக்கர் நிலமும் பராமரிப்புக்கான 100 ஏக்கர் நிலமும், அணையில் தேங்கும் நீரும். அணையின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பும், படகு மற்றும் சாலை போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் தமிழ்நாட்டிற்குச் சொந்தமாகும். புதிதாக கட்டப்பட்டுள்ள இவ்வணை நீரானது தமிழ்நாட்டிற்குத் தொடர்ந்து காலம்காலமாகக் கிடைக்கச் செய்யவேண்டும் என்ற நோக்கத்திற்காக 999 ஆண்டுகள் ஒப்பந்த்தம் போடப்பட்டாலும் இந்த ஒப்பந்த்த காலம் முடியும் தருவாயில் மீண்டும் 999 ஆண்டுகள் ஒப்பந்த்தம் செய்து கொள்வதற்கான உறுதிமொழியையும் திருவிதாங்கூர் சமஸ்த்தானத்திடமிருந்து ஆங்கிலேய அரசாங்கம் மேற்படி ஒப்பந்தத்திலேய பெற்றிருக்கிறது. ஆக அப்பகுதியில் கட்டப்படும் அணை நீரானது எல்லா காலத்திற்கும் தமிழ்நாட்டிற்கு வரவேண்டும் என்பதுதான் அணை கட்டப்படுவதன் நோக்கமும் ஒப்பந்தத்தின் சாரமும்மாகும்.

தொடரும்...

Saturday, September 5, 2009

தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!

தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!

முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...!!

வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!

முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -பாகம் ஒன்று



முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும்
-பாகம் ஒன்று

தமிழகத்தின் ஆறுகள் சிதைந்த வரலாறு

"நீரின்றி அமையாது உலகு" என்றார் வள்ளுவர். இன்றையச்சுழலில் 'சில ஆறுகள் இன்றி அமையாது தமிழகம்' என்றே குறிப்பிடலாம். தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனித உயிர்களின் அடிப்படை வாழ்வாதாரங்களில் நீர் ஆதாரமும் ஒன்று. மனித உயிர்களால் உற்பத்தி செய்யமுடியாத நீர் ஆதாரமே இயற்க்கை வழங்கிய மிகப்பெரும் கொடையாகும். மேலும் இந்நீர் ஆதாரமானது மனித சமுகத்தின் உற்பத்தி நடவடிக்கைகளான வேளாண்மை மற்றும் தொழில்துறைக்கும் அடிப்படையாகவும் அமைந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் பெரும்பான்மை உற்பத்தி நடவடிக்கையானது வேளாண்மைத்துறை சார்ததாகவே அமைந்திருக்கிறது. இயற்கையாய் உருவெடுத்துத் தன் போக்கில் ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைத் தடுத்தும், மறித்தும், திசை திருப்பியும். அணைகளை எழுப்பியும் உகந்த வகையிலே பயன்படுத்தமுடியும். தமிழ்நாட்டில் ஓடிய வைகையாறு, காவிரியாறு, பவானியாறு ,நொய்யலாறு, தாமிரபரணியாறு, பாலாறு, ஆரணியாறு, கொரட்டளையாறு, கூவமாறு, அடையாறு, ஓங்கூராறு, வராகஆறு, மலட்டாறு, பெண்ணையாறு, கடிலமாறு, வெள்ளாறு, அக்கினியாறு, அம்புலியாறு, வெண்ணாறு, கொலுவநாறு, பம்பாறு, மணிமுத்தாறு, கோட்டைக்கரையாறு, உத்திரகோசமங்கையாறு, குண்டாறு, வேம்பாறு, வைப்பாறு, கல்லாறு, கோரம்பள்ளமாறு, கரமனையாறு, நம்பியாறு, அனுமானாறு, பல்லவாறு, வள்ளியாறு, கோதையாறு போன்ற ஆறுகள்.



தமிழ்நாட்டின் குடிநீர்த் தேவையையும் வேளாண்மை உற்பத்தித் தேவையையும் நிறைவு செய்து வந்தன. அதே சமயத்தில் வேகமாக உருவெடுத்துவந்த தரகு-முதலாளித்துவத் தொழில்துறை ஆலைகளாலும், பெருநகரங்கள் உருவாக்கத்தாலும், நச்சுக்க்ழிவுநீர்க் கலப்பாலும், தமிழ்நாட்டில் ஓடிய பல ஆறுகள் சிதைந்தும், காணாமலும்,அழிக்கப்பட்டும் விட்டன. ஆறுகளும் நீரின்றி வறண்டு போய்க்கிடக்கின்றன.

'காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி - என


மேவிய ஆறு பலவினும் - உயர்
வெள்ளை மணல் கொண்ட தமிழ்நாடு'

என்ற கண்னதாசனின் பாவரிகள் தமில்நாட்டில்லுள்ள ஆறுகளின் அவலத்தை உணர்த்தும். ஓர் ஆற்றின் இக்கரையிலிருந்து அக்கரைசெல்வதற்கு அன்று ஓடம் தேவைப்பட்டது. ஆனால் இன்றோ காலில் செருப்பு இருந்தால் மட்டுமே ஆற்றைக் கடக்க முடியும் என்ற நிலையில் தமிழ்நாட்டின் ஆறுகள் மணல் திட்டுகலாய்க் காட்சியளிக்கின்றன. இம்மாற்றங்கள் இயற்கையினால் மட்டுமே நிகழ்ந்ததாகச் சொல்லமுடியாது. தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள கருநாடகம்,ஆந்திரம், மற்றும் கேரள அரசுகளின் துரோகங்களும், அத்துரோகங்களுக்கு டில்லி அரசு துணை சென்றதும் ஒரு காரணமாகும். காவிரி ஆற்றில் துரோகம்.... பாலாற்றில் துரோகம்...... இந்த வரிசையில் முல்லைப் பெரியாறு அணையிலும் தொடர் துரோகங்கள்.....

முல்லைப் பெரியாற்று நீர் யாருக்குச் சொந்தம்? அதன் வரலாறு என்ன? அதற்க்கு இழைக்கப்பட்ட துரோகங்கள் என்ன? பெரியாற்றின் உரிமைகலுக்காய்ப் போராடுவதன் பாதை என்ன? முல்லைப் பெரியாற்றில் தமிழர் உரிமையை வென்றெடுப்பது எப்படி?

தொடரும்....

Tuesday, August 11, 2009

ஆகஸ்ட்டு-15 சுதந்திர நாளா ?






ஆகஸ்ட்டு-15 சுதந்திர நாளா ?


இந்திய எகாதிபத்தியமானது ஆகஸ்ட்டு-15 நாளை தனக்கு சுதந்திரநாளாக அறிவித்துக்கொண்டு பல்வேறு மொழி தேசிய இனங்களின் வாழ்வாதாரத்தை அடக்கி ஒடுக்கி வருகிறது.தமிழ் தேசமோ தனது சொந்த இறையாண்மையை இழந்து டெல்லியின் அடிமையாக இருக்கிறது. இராயிரம் பழமைவாய்ந்த தாய்மொழி தமிழில் படிக்கவும், ஆட்சி செய்யவும், நீதிமன்றத்திலும், நிர்வாகத்திலும் தமிழை பயன்படுத்தமுடியாமல் இருக்கிறோம். மறுபுறமோ ஆங்கில திமிங்கலமும், இந்தியும் தமிழகத்தில் கோலோச்சுக்கிறது.


ஈழ தேசிய விடுதலைப்போரை ஏழு நாடுகள் துணையோடு இரத்தவெள்ளத்தில் கோழைத்தனமாக மூழ்கடித்ததோடு, தமிழகமீனவர்களையும் பாதுகாக்க இயலாத உரிமையை இழந்த இனமாக தமிழகம் இருந்துவருகிறது. தமிழகத்தின் உயிராயுதமான நீரை அண்டை தேசிய இனங்கள் பறித்து வருகிறது. முல்லைப்பெரியாறு, காவிரியாறு, பாலாறு என அதன் உரிமைகளை இழந்து வரட்சி தேசமாக மாறிவருகிறது. இந்தியா என்ற பெயரினால் நமது தமிழ்த்தேசம் குடிநீரில், ஆற்றுநீரில், அணைநீர் உரிமையை இழந்துவருகிறது, மேலும் ஒடுக்கப்பட்ட மக்கள் மனிதர்கள் என்ற மதிப்பில்கூட இன்று வரை பெறமுடியாமல் ஊர், சேரி என இழிவுப்படுத்தப்பட்டு வருவதோடு தீண்டாமை கொடுமையும் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஈழத்து தமிழர்கள் சுயமரியாதையோடு தமிழகத்தில் வாழமுடியாமல் அகதிகள் என்ற பெயரில் கொட்டடியில் அடைப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.


தமிழகத்தில் "விவசாயமும்-தொழிற்துறையும்" தரகு முதலாளிய ஏகாதிபத்திய சக்திகள் நலனுக்காக சுறையாடப்பட்டுவருகிறது மேலும் பெண்களின் உரிமை, சமத்துவத்தை மதிக்காத ஆணாதிக்க சமுதாயமாக நிலவுகிறது. இந்நிலையில் ஒடுக்கப்பட்ட தமிழ்த்தேசிய இனம் ஆகஸ்ட்டு-15 நாளாக கொண்டாட இயலுமா ? இல்லவே இல்லை தமிழ்தேசிய விடுதலை உழவர் தொழிலாளர் தலைமையில் தமிழ்தேசிய மக்கள் சனநாயக குடியரசு அமைப்பதே சுதந்திரமாகும்

இந்நிலையில் தமிழ்தேசிய மக்களிடம் கிழ்கண்ட முழக்கத்தின் அடிப்படையில் ஆகஸ்ட்டு-15 சுதந்திர நாளா ? என்ற கேள்வி கணைகளோடு பு.இ.மு, பு.தொ.மு, ஒ.ம.வி.மு, பு.மா.மு, ஆகிய அமைப்புகள் சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், மற்றும் தெருமுனைகூட்டங்கள் வாயிலாக விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டனர்.

இந்திய ஏகாதிபத்தியத்திடம் ஆட்சியுரிமை இழந்த அடிமை தமிழகத்துக்கு ஆகஸ்ட்டு-15 சுதந்திர நாளா ?
*தமிழ் ஆட்சி மொழி, பயிற்று மொழி, நீதி-நிர்வாக மொழியுரிமையிழந்து ஆங்கிலமும், இந்தியும் கோலோச்சுவது சுதந்திரமா?
*ஈழத்தமிழர்களையும், மீனவர்களையும் காக்கும் உரிமை இழந்தது சுதந்திரமா?
*குடிநீரும், நதிநீரும், அனைநீரும் பெறமுடியாதது சுதந்திரமா?
*ஒடுக்கப்பட்ட மக்களின் குடியுரிமை-சமத்துவம் மறுக்கப்படுவது சுதந்திரமா?
*எகாதிபத்தியபிடியில் தொழில்துறை, விவசாயம் அழிவது சுதந்திரமா ?
புரட்சிகர இளைஞர் முன்னணி.
புரட்சிகர தொழிலாளர் முன்னணி .
ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி.
புரட்சிகர மாணவர் முன்னணி.
-தமிழகம் கதிர்








Saturday, July 25, 2009

'இந்து'-ராமை கண்டித்து......!



சிங்கள இனவெறியன் பாசிசக்கொடுங்கோலன் ராசபக்சே அரசு, இந்திய, சீன, பாக்கிஸ்தான், மற்றும் ஏகாதிபத்திய நாடுகளின் உதவிகளைப்பெற்று ஈழத்தமிழர்களை கூண்டோடு அழித்து தாயகநிலத்தை பறித்து, ஈழத்தமிழர்களை ராசபக்சேவின் வதை முகாம்களில் சித்திரவதை,படுகொலை செய்துவருகின்றனர்.

முள்கம்பி வேலிகளில் விலங்குகள்போல் அடைத்தும் உண்ண உணவின்றி, குடிநீரின்றி, 'ஆட்டுமந்தை'போல் கட்டாந்தரையில் தமிழீழமக்கள் அல்லல் படுகின்றனர், இதை உலக ஏகாதிபத்திய நாடுகள் கைகட்டி வேடிக்கை பார்த்துவருகிறது.

இந்நிலையில் உலக ஊடகங்கள் , ராசபக்சேவின் வதை முகாம்களை பார்க்க அனுமதி மறுத்துவரும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த தமிழின எதிரி 'இந்து'-ராம் தன் இந்து ஏட்டில் தமிழகத்தின் அகதி முகாம்களைவிட ராசபக்சேவின் அகதி முகாம்கள் சிறப்பாக உள்ளது என்று சொல்லியுள்ளார்.
ஈழத்தமிழர்களின் பிறப்புரிமை என்பது, தனது தமிழீழ தாயகத்தை அடைவதே. அதுவன்றி தமிழீழ மக்களுக்கு கதி முகாம் தீர்வாகாது. இது நல்ல அகதி முகாம், இது கெட்ட அகதி முகாம் என்று ஒன்றும்மில்லை. அகதிமுகாம் என்பதே சுதந்திரத்தை பறிப்பதேயாகும். இத்தகைய ஈழத்தமிழருக்கு, எதிராக எழுதிவரும் சிங்கள கைக்கூலி தமிழின எதிரி 'இந்து'-ராம் உள்ளிட்ட கும்பலை தமிழகத்தைவிட்டு விரட்டியடிக்கவேண்டும் என்று பு..மு.(புரட்சிகர இளைஞர் முன்னணி) அமைப்பினரால் சென்னை மாவட்ட அளவில் சுவரொட்டி பரப்புரை விரிவாக செயதுள்ளனர்.


இவன் ..

செங்கடலான் தமிழகம்