Tuesday, February 16, 2010

தமிழ் வழியில் சமச்சீர் கல்வியை செயல்படுத்த கோரி புரட்சிகர மாணவர் முன்னணி சார்பில் கருத்தரங்கம் -ஓவியக்காட்சி



சென்னை- பெரம்பூரில் தமிழ் வழியில் சமச்சீர் கல்வியை செயல்படுத்த கோரி 15-02-2010 அன்று மாலை 3.00 மணியளவில் புரட்சிகர மாணவர் முன்னணி சார்பில் கருத்தரங்கம் -ஓவியக்காட்சியும் நடைபெற்றது.




தமிழகத்தில் நிலவிவரும் கல்வியிலுள்ள ஏற்றத்தாழ்வை அகற்ற வேண்டும், கல்வி அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என கல்வியாளர்களும், சமுக முன்னணியாளர்களும், மக்கள் நலன் கொண்ட புரட்சிகர அமைப்புகளும் போராடிவருகின்றனர். இந்நிலையில் சமச்சீர் கல்வியை தமிழ் வழியில் செயல்படுத்தவும் , கீழ்கண்ட முழக்கத்தின்


அடிப்படையில்தமிழக அரசே!


தமிழர்களை தமிங்கிலர்களாக்கும் ஆங்கில வழிப்பள்ளிகளை மூடு !




தமிழ் நாட்டை தமிங்கில நாடாக்கும் ஆங்கில வழிப்பள்ளிகளை மூடு !




தமிழ் தேசிய வேரில் கொதிநீரை ஊற்றும் ஆங்கில ஆங்கில வழிப்பள்ளிகளை மூடு !




தமிழர்களை இழிவுப்படுத்தி அடிமைப்படுத்தும் ஆங்கில வழிப்பள்ளிகளை மூடு !




சமச்சீர் கல்வி என்ற பெயரில் ஆங்கில கடை வியாபாரிகளுக்கு எடுபிடி வேலை செய்யாதே !




தமிழ் வழியில் சமச்சீர் கல்வியை செயல்படுத்து ! மாணவர்களே


ஆங்கில அடிமைக் கல்வியை துக்கி எறிவோம் !




தமிழ் வழியில் சமச்சீர் கல்விக்காக போராடுவோம் !




தமிழக அரசை வலியுறுத்தி 15-02-2010 மாலை 3.00 மணியளவில் பெரம்பூர், செம்பியம் வணிகர் சங்க திருமணக் கூடத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு தோழர்.கபிலன் ( புரட்சிகர மாணவர் முன்னணி அமைப்பாளர் ) தலைமை வகித்தார், பேரா.முத்துக்குமரன் ( சமச்சீர் கல்விக்குழு தலைவர் ), எஸ்.எஸ்.ராஜகோபாலன் ( சமச்சீர் கல்விக்குழு உறுப்பினர் ), பேரா.வசந்தி தேவி ( மேனாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ), பேரா.பிரபா.கல்விமணி( மக்கள் கல்வி கூட்டமைப்பு ) , தோழர்.மார்க்ஸ் ( புரட்சிகர மாணவர் முன்னணி ) ஆகியோர் கருத்துரை வழங்கினர். இதில் சுமார் 200௦௦ மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட 300 பேர் கலந்துகொண்டனர்





No comments:

Post a Comment