Tuesday, November 24, 2009

தமிழக மீனவர்கள் பாதுகாப்புக்கு ஆயுதங்கள் வழங்கு !




தமிழர்களின் சொந்த கடற்பரப்பு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதிலிருந்து 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தமிழக கடற்பரப்பில் சிங்கள கடற்படையால் தொடர்ந்து சுட்டுக்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதனை கண்டித்து பேரணி பொதுக்கூட்டம் புரட்சிகர இளைஞர் முன்னணி தலைமையில், புரட்சிகர தொழிலாளர் முன்னணி , ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி , புரட்சிகர மாணவர்முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து திருவொற்றியூர் பகுதில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தினர்.
இப்பேரணி
22/11/2009
மாலை 4 மணி அளவில் சுங்கசாவடியிலிருந்து (திருவொற்றியூர்) தோழர்.எழிலன் தலைமையில் துவங்கியது , கடலாரு பத்திரிக்கை ஆசிரியர் பேரணியை துவக்கிவைத்தார். இப்பேரணி நல்லதண்ணீர் ஒடைகுப்பம்,திருச்சினாங்குப்பம், ஒண்டிகுப்பம், திருவொற்றியூர்குப்பம் வழியாக பெரியார் நகரில் (திருவொச்ற்றியூர்) முடிவுற்றது. பேரணி முடிவில் மாலை 6 மணிக்கு தோழர்.தென்கனல் தலைமையில் நடைபெற்றது பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்திய அரசே!
*சிங்கள இனவெறி அரசுடனான தூதரக உறவுகளை இரத்து செய் !
*பொருளுதவிகளையும், ஆயுத உதவிகளையும் உடனே நிறுத்து !
*கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய் ! கச்சத்தீவை திரும்பப் பெறு !
தமிழக அரசே!
*தமிழக மீனவர்கள் பாதுகாப்புக்கு ஆயுதங்கள் வழங்கு !
*இந்திய - இலங்கை கச்சத்தீவு ஒப்பந்தத்தை நிராகரி !
தமிழக மக்களே!
*தமிழக மீனவர்களின் வாழ்வுரிமைக்கும், பாதுகாப்புக்கும் போராடுவோம் !
*சிங்கள, இந்திய அரசுகளின் தமிழின அழிப்புக் கொள்கையை முறியடிப்போம் !

மேற்கண்ட முழக்கங்கள் அடிப்படையில் தோழர்.தாமரை(புரட்சிகர தொழிலாளர் முன்னணி ), தோழர்.தமிழ்மணி(புரட்சிகர தொழிலாளர் முன்னணி ),தோழர்.மார்க்ஸ்(புரட்சிகர இளைஞர் முன்னணி),தோழர்.கபிலன்(புரட்சிகர மாணவர் முன்னணி),தோழர்.ஆனந்தன்(ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ,ராஜாமணி - நல்லதண்ணீர் ஒடைகுப்பம் மீனவ பஞ்சாயத்து ,ஆர்.சத்தியநாதன் - தலைவர் திருச்சினாங்குப்பம் மீனவபஞ்சாயத்து (திருவொற்றியூர்),எம்.மாசிலமணி - ஒண்டிகுப்பம் மீனவபஞ்சாயத்து (திருவொற்றியூர்),ஆர்.மணி - திருவொற்றியூர் மீனவபஞ்சாயத்து ,எம்.பழநி - நிர்வாகி பலகைதொட்டிகுப்பம் மீனவபஞ்சாயத்து,தோழர்.விஜயா - நல்லதண்ணீர் ஒடைகுப்பம்,மாசிலமணி - தாழங்குப்பம் மீனவபஞ்சாயத்து (எண்ணூர்),ராஜி - நிர்வாகி நெற்றுகுப்பம் மீனவபஞ்சாயத்து (எண்ணூர்),எம்.வரதன் - முகதுவாரகுப்பம் மீனவபஞ்சாயத்து (எண்ணூர்),சிந்தனைசிற்பி சிங்கரவேலர் பேரவை ( Ashok Leyland ),வா.வு.சி நகர் மீனவபஞ்சாயத்தார் ,பெரியகுப்பம் மீனவபஞ்சாயத்தார் (எண்ணூர்),சின்னகுப்பம் மீனவபஞ்சாயத்தார் (எண்ணூர்),காசிகுப்பம் மீனவபஞ்சாயத்தார் (எண்ணூர்)
ஆகியோர் கலந்து கொண்டனர். 7 கோடி மக்கள் கொண்ட தமிழர்கள் நம்மால் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவதை நம்மால் தடுக்க இயலாத கையறுநிலையில் நாம் உள்ளோம். இதற்கு தமிழகத்திற்கு இறையாண்மை ஏதும் இல்லாததால்தான் நாம் அடிமைத்தனத்தில் உள்ளோம். அடிமையின் குரல் அம்பலம் ஏறாது. இந்திய 'இறையாண்மைக்கு' தமிழகத்தின் சொந்த இறையாண்மையைப் பலி கொடுத்துவிட்டு அடிமையாய் குரல் எழுப்பும் தமிழ் நாட்டின் குரல் டெல்லி ஏகாதிபத்தியத்தின் காதுகளில் ஏறாது.தெற்காசிய மண்டலத்தில் இந்தியாவின் தமிழர் விரோதக் கொள்கை முடிவுக்கு வர வேண்டும் என்றும் சிங்கள இனவெறி அரசுடனான தூதரக உறவுகளை இரத்து செய் யவும்,பொருளுதவிகளையும், ஆயுத உதவிகளையும் உடனே நிறுத்த வேண்டும் என்றும்,*கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய் ! கச்சத்தீவை திரும்பப் பெறு ! என்றும்,தமிழக அரசே!
*தமிழக மீனவர்கள் பாதுகாப்புக்கு ஆயுதங்கள் வழங்கு ! *இந்திய - இலங்கை கச்சத்தீவு ஒப்பந்தத்தை நிராகரி ! என்றும் தமிழக மக்களே! *தமிழக மீனவர்களின் வாழ்வுரிமைக்கும், பாதுகாப்புக்கும் போராடுவோம் ! *சிங்கள, இந்திய அரசுகளின் தமிழின அழிப்புக் கொள்கையை முறியடிப்போம் ! என பேசினார் .

இறுதியில் தோழர்.தமிழ்மாறன்(புரட்சிகர தொழிலாளர் முன்னணி) நன்றியுரையாற்றினார், இப்பேரணி பொதுக்கூட்டம் துவக்கம் மற்றும் முடிவில் பு.இ.மு, பு.தொ.மு, ஒ.ம.வி.மு, பு.மா.மு ஆகிய அமைப்பு தோழர்கள்,மீனவப்பெருங்குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 2000 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர், இப்பொதுக்கூட்டத்தின் முடிவில் 6 கண்டன தீர்மானங்கள் நிறைவ்வேற்றபட்டது. இப்பேரணி பொதுக்கூட்டம் வாயிலாக திருவொற்றியூர் பகுதி மக்களிடையே புரட்சிகர எழுச்சியை
உண்டாககியது
இப்படிக்கு
தென்கடலான்
தமிழ்நாடு

No comments:

Post a Comment