Tuesday, October 20, 2009

முல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -7

மலையாள இனவெறியைத் தூண்டிய கேரள சி.பி.எம்:

சர்வதேசத் தொழிலாளர்களின் ஒற்றுமை குறித்துப் பேசும் சி.பி.எம். கட்சிதான் தற்போது கேரளத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் புரட்சி என்றும், தொழிலாளர் வர்க்கப் புரட்சி என்றும் வாயிகிழிய பேசிக்கொண்டிருக்கும் சி.பி.எம். கட்சி கேரளத்தின் எதிர் கட்சியாக இருந்தபோது முல்லை பெரியாறு அணை குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை கடந்த 27-02-2006 இல் வழங்கியது. அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி தலைமையிலான கேரள அரசு அத்தீர்ப்பை ஏற்க மறுத்துவிட்டது. மேலும் இத்தீர்ப்பைச் செல்லுபடியாக்கவிடாமல் தடுப்பதற்காகவே கேரளச் சட்டமன்றத்தில் 'கேரள அணைகள் பாதுகாப்புச் சட்டம்' ஒன்றை முன்மொழிந்தது. அச்சட்டத்தை எதிர்க் கட்சியாக இருந்த சி.பி.எம். கட்சி வழிமொழிந்தது. அதுமட்டும்மல்லாமல், உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு செய்தது. அதற்கடுத்துதான், சி.பி.எம். கட்சி ஆட்சிக்கு வந்தது. இதற்கிடையில் முல்லைப் பெரியாறு அணை குறித்து ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுபடியும் உறுதி செய்யும் வகையில் 2006 ஆகஸ்ட்டு மாதத்தில் தீர்ப்பை வழங்கியது.


பல இலட்சம் தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க மறுத்துக் காலில் போட்டு மிதிக்கிறது மலையாள இனவெறி சி.பி.எம். அரசு. ஆனால் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாக வேடங்கட்டும் இக்கட்சி, கொகோ கோலா ஆலை குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தலைவணங்கி வரவேற்றது. அதாவது, கேரளத்தின் பாலக்காடு அருகே பிலாசிமாடா எனும்மிடத்தில் அமைந்துள்ள அமேரிக்க ஏகாதிபத்தியத்தின் கொகோ கோலா ஆலையை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கொகோ கோலாவுக்குச் சாதகமான வகையில் தீர்ப்பை வழங்கியது. இத்தீர்ப்பை சி.பி.எம். கட்சி துளியளவும் எதிர்க்கவில்லை, பல இலட்சம் மக்கள் பயன்பெரும் வகையில் வெளிவந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மறுப்பதும், ஏகாதிபத்திய நிறுவனங்கள் கொள்ளையடிக்கும் வகையில் வெளிவரும் தீர்ப்புகளை உச்சிமுகர்ந்து வரவேற்பதும்தான் சி.பி.எம். கட்ச்யின் சர்வதேசியமாக இருந்து கொண்டிருக்கிறது.

பாட்டாளி வர்க்க சர்வதேசியம் பேசித் திரியும் சி,பி.எம். கட்சி, மிக எளிய உண்மைகளைக்கூட கண்டு கொள்ள மறுக்கின்றது. உண்மைக்கு மாறாகப் பல பொய்யான செய்திகளையே கிளிப்பிள்ளை மாதிரி திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறது. முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் இடுக்கி உள்ளிட்ட அய்ந்து மாவட்ட மக்கள் கடலில் முழ்கி இறந்து விடுவார்கள் என்ற பொய்யான செய்திகளைத் திட்டமிட்டுப் பரப்பி விடுவதில் சி.பி.எம்.கட்சி கங்கணம் கட்டித் திரிகின்றது. உண்மை என்னவெனில், முல்லைப் பெரியாறு அணையின் உபரிநீர் வழிந்தோடும் பகுதி முழுவதும் அடர்ந்த வனப்பகுதியாகும். அப்பகுதியானது மக்கள் வாழும் பகுதி அல்ல என்பது முதல் உண்மை. அதுமட்டும்மல்லாமல், முல்லைப் பெரியாறு அணையானது கடல் மட்டத்திலிருந்து 2869 அடி உயரத்தில் உள்ளது. அணை நீரில் மூழ்கி விடுவதாகச் சொல்லப்படும் பகுதிகள் அனைத்தும் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி முதல் 4750 அடி வரையிலான உயரத்தில் உள்ளன. நீர் பள்ளமான பகுதியை நோக்கியே பாயிந்தோடும் என்ற எளிய உண்மையைக் கூட மறைத்து, கேரள மக்களிடையே பயபீதியை உருவாக்கி வருகின்றது கேரளாவின் சி.பி.எம். அரசு.

கேரள அரசு சொல்வதைப் போன்று அணை உடைவதாக ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொண்டாலும், முல்லைப் பெரியாறு அணையின் கொள்ளளவைக் (முழுக் கொள்ளளவு 15 டி.எம் சி.) காட்டிலும், பல அளவு கொள்ளளவு கொண்ட (70 டி.எம் சி.) இடுக்கி அணை முல்லைப் பெரியாறு அணைக்குக் கிழே கட்டப்பட்டு இருக்கிறது. ஒரு வேலை முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கூட அவ்வணையின் 15 டி.எம் சி. நீரும் 70 அடி டி.எம் சி. கொள்ளளவு கொண்ட இடுக்கி அனைக்குத்தான் போய்ச்சேரும். முல்லைப் பெரியாறு அணைக்கும் இடுக்கி அணைக்கும் இடைப்பட்ட இப்பகுதி மக்கள் குடியிருப்பு இல்லாத காட்டுப் பகுதியாகும். அதுமட்டும்மலாமல் இடுக்கி அணைக்குக் கிழே கேரள அரசால் கட்டப்பட்ட பத்து அணைகள் இருக்கின்றன. ஆக முல்லைப் பெரியாறு அணை உடைந்து-அதனால் இடுக்கி அணை உடைந்து அதற்கடுத் துள்ள பத்து அணைகளும் உடைந்து இடுக்கி உள்ளிட்ட அய்ந்து மாவட்டங்களில் வாழும் 35 இலச்சம் மக்கள் கடலில் மிதப்பது போன்ற கிராபிக்ஸ் வீடியோ காட்சிகளை இணைய தளத்திலும், உள்ளூர் கேபிள் தொலைக் காட்சிகளிலும், குருந்தகுடு களிலும் பரப்பிய 'கம்யூனிச மாமேதை' என சி.பி.எம். கட்சியினரால் புகழப்பட்ட அச்சுதானந்தன் தான் கேரள அரசின் தற்போதைய முதல்வர். "விட்டலாச்சாரியா" படங்களையும் மிஞ்சும் வகையில் சி.பி.எம். கட்சியினரால் அவிழ்த்துவிடப்பட்ட கிராபிக்ஸ் பொய்க் காட்சிகள் கொண்ட இப்படத்திற்கு, தமிழ்நாட்டில் உள்ள சி.பி.எம். கட்சியின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இந்த ஆண்டின் சிறந்த படமாகத் தேர்ந்தெடுத்து விருது கொடுத்தாலும் வியப்பதற்கில்லை.

கேரள சி.பி.எம். அரசின் முதல்வர் அச்சுதானந்தன் இன்னொரு கற்பனைப் புரட்டையும் அவிழ்த்துவிட்டுள்ளார். அதாவது முல்லைப் பெரியாறு அணை சுண்ணாம்புக் காறையால் கட்டப்பட்டது என்றும், இதன் ஆயுள் காலம் 50 ஆண்டுகளுடன் முடிந்துபோய்விட்டது என்றும் பென்னிக் குய்க் சொன்னதாக அச்சுதானந்தன் கூறுகிறார். அச்சுதானந்தன் இப்படிக் கூறுவது முழுக்க முழுக்க வடிகட்டிய அயோக்கிய பொய்த்தனம் ஆகும். பென்னிக் குய்க் எந்த ஒரு இடத்திலும் இப்படிக் குறிப்பிடவில்லை என்பது ஒருபுறமிருக்க, அச்சுதானந்தன் வாதப்படி 50 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட அணைகளை இடிக்க வேண்டும் என முடிவு செய்தால் இந்தியாவில் மட்டும்மல்ல உலகில் உள்ள பெரும்பாலான அணைகள் முழுவதயும் இடிக்கத்தான் நேரிடும். அச்சுதானந்தன் கூறுவது போல 50 ஆண்டுகளுக்கு முந்திய எந்த அணையும் பலவீனமாக இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடவில்லை. மேலும் முல்லைப் பெரியாறு கட்டப்பட்ட காலத்தில் அதே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட பல அணைகள், ஆற்றுப் பாலங்கள் போன்றவை இன்றளவிலும் நல்ல நிலையில் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதே அடிப்படை உண்மையாகும்.
தொடரும்...

1 comment:

Abu abdurrahmaan said...

Thank you very much for the complete information about the Mullai Peiyar Issue - I was very egger to know it. Your information is very useful to me and to the entire Tamil people. If all tamilien rice together and fight the Mayalalis from entire Tamil Nadu then only this dogs knows our power.

Post a Comment